Tamilnadu News Live : தமிழகத்தில் அண்ணா பல்கலைகழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்வுகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்த தேர்வில் 62% பேர் தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர்.
உலகம்ன் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. இந்நிலையில் பாடங்கள் மற்றும் தேர்வுகள் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்று வந்தது. இதனால் மாணவர்களின் கற்றல் திறனில் குறைபாடு ஏற்படும் என பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பரில் கொரோனா பாதிப்புகள் குறைந்ததால் கல்லூரிகள் திறக்கப்பட்டன. ம்ேலும், கடந்த மார்ச் ஏப்ரல் மாதங்களில் நடைபெற்றது. இதன் தேர்வு முடிவுகள் 2 நாட்களுக்கு முன்னாள் வெளியானது.
மேலும், இந்த தேர்வில் 38% மாணவர்கள் மட்டுமே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி அடைந்துள்ளதாக அண்ணா பல்கலைகழகம் தெரிவித்துள்ளது. மேலும், 62% மாணவர்கள் அரியர் வைத்துள்ளனர். மேலும் அதிகமான மாணவர்கள் கணிதத்தில் அரியர் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இதுகுறித்து கடந்த 2 ஆண்டுகளாக மாணவர்கள் நேரடி தேர்வை எதிர்கொள்ளாததே இதற்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…