ஜெருசலேம்:
18 வயதான யோயல் லெஹிங்கஹெல் என்ற இளைஞன் இஸ்ரேலின் வடக்கு மாவட்டத்தில் உள்ள Nof Hagalil என்ற நகரத்திற்கு இந்த வருட தொடக்கத்தில் இந்தியாவில் இருந்து தனது குடும்பத்துடன் குடிபெயர்ந்துள்ளார்.
இந்தநிலையில், யோயல் லெஹிங்கஹெல் இந்தியாவில் இருந்து குடிபெயர்ந்த தனது நண்பரான மெர் பல்டெல் என்பவரை சந்திப்பதற்காக நோஃப் ஹகலில் உள்ள தனது வீட்டிலிருந்து கிரியாத் ஷ்மோனா என்ற நகருக்கு சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது இருவரும் ஒரு பிறந்தநாள் விழாவில் கலந்துக்கொண்டுள்ளனர். மேலும் இந்த விழாவில் 20க்கும் மேற்பட்ட சிறுவர்களும் கலந்துக்கொண்டுள்ளனர். அப்போது திடீரென சக மாணவர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த சண்டையில் பலமாக தாக்கப்பட்டத்தில் லெஹிங்கஹெல் பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில், அருகிலுள்ள சாட்ஸோர் ஹக்லிலிட் நகரத்தை சேர்ந்த 15 வயதுடைய சிறுவனை போலிஸார் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், வெள்ளிக்கிழமை 13 முதல் 15 வயதுக்குட்பட்ட மேலும் ஏழு இளைஞர்களை காவலில் வைத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…