கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே உள்ள கட்டைக்காடு பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி உஷா (வயது 37). இவர் வெள்ளிச்சந்தை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். இந்த தம்பதிக்கு 7 வயதில் ஒரு மகன் இருக்கிறான். தற்போது உஷா 8 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை மாலை வேலை முடிந்து தனது வண்டியில் வீட்டிற்கு வந்துக் கொண்டிருந்தார். கட்டைக்காடு அரசுப்பள்ளி அருகே சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது வழியாக வந்த இன்னொரு இருசக்கர வாகனம், இவருடைய வாகனத்தின் மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட உஷா பலத்தகாயம் அடைந்ததையடுத்து, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ஆனால், சிகிச்சை பலனின்றி நள்ளிரவு உஷா பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், வயிற்றில் இருந்த குழந்தையும் உயிரிழந்தது. இந்த விபத்து குறித்து மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சாலை விபத்தில் 8 மாத கர்ப்பிணி உயிரிழந்த அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…