பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில் கடந்த சில நட்களாக சிலர் சட்டத்திற்கு புறம்பாக கள்ளச்சாராய காய்ச்சி விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 2ம் தேதியன்று கள்ளச்சாராயம் அருந்திய சிலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் உடனடியாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதுவரை கள்ளச்சாராயம் அருந்திய 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் கண் பார்வையை இழந்துள்ளனர்.
இதனையடுத்து, உயிரிழந்தவர்கள் குடித்த கள்ளச்சாராயம் குறித்து ஆய்வு செய்ய சம்பவ இடத்திற்கு மருத்துவ குழுவினர் விரைந்துள்ளனர்.
மேலும், பீகாரில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்து வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…