Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்த சாமியார்.. போலீசார் வலைவீச்சு...

Muthu Kumar August 05, 2022 & 12:50 [IST]
சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்த சாமியார்.. போலீசார் வலைவீச்சு...Representative Image.

சென்னை மதுரவாயல் அருகே பரிகார பூஜை செய்வதாக சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சாமியார் தலைமறைவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மதுரவாயல் அருகே கந்தசாமி நகர் பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் அதே பகுதியை சேர்ந்த சந்திரசேகர் என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். இந்நிலையில், அந்த கோவிலுக்கு அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் தரிசனம் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், தரிசனத்துக்கு வந்த பெண்ணிடம் சிறுமிக்கு தோஷம் இருப்பதால் சிறப்பு பூஜை செய்ய வேண்டும் என பூசாரி கூறியுள்ளார். இந்த பூசாரியின் பேச்சை நம்பிய சிறுமியின் பெற்றோர் பூசாரியின் வீட்டில் சென்று சில நாட்கள் தங்கியுள்ளனர்.

இதனையடுத்து, பூசாரியின் வீட்டில் பூஜை செய்வதாக சிறுமியை தனியறைக்கு அழைத்து சென்ற பூசாரி சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். மேலும், இதை வெளியில் சொன்னால் கொலை செய்வதாக மிரட்டல் விடுத்துள்ளார். ஆனால் சிறுமி இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறியதால் ஆத்திரமடைந்த பெற்றோர் பூசாரியை அடித்து உதைத்துள்ளனர். 

மேலும், இதுகுறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகாரளித்தனர். இதனையடுத்து, தலைமறைவான பூசாரியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்