ராஜஸ்தான் மாநிலம் ஜாலூர் மாவட்டம் சுரனா கிராமத்தை சேர்ந்த 9 வயது சிறுவன் இந்திர மேக்வல். பட்டியலின சமூகத்தை இந்த சிறுவன் அக்கிராமத்தில் உள்ள பள்ளியில் படித்து வருகிறான். எப்போதும் வழக்கம்போல பள்ளிக்கு சென்ற இந்திர மேக்வல், அன்றைய தினம் (ஜூலை 20 ஆம் தேதி) தாகத்திற்காக வகுப்பறையில் இருக்கும் குடிநீர் பானையை தொட்டு அதில் இருந்து தண்ணீர் குடிக்க எடுத்துள்ளான்.
இதை பார்த்த அந்த வகுப்பு ஆசிரியர் ஷாயில் சிங், மாணவனை கடுமையாக தாக்கியுள்ளார். இதற்கு காரணம் மாணவன் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர் என்பதால். ஆசிரியர் தாக்கியதில் மாணவனின் காது, கண், முகம் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மயக்கமடைந்த நிலையில், அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.
இந்நிலையில், சில நாட்களாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அப்பாவி சிறுவன் இந்திர மேக்வல் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆசிரியரின் மீது கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாகத்திற்காக தண்ணீர் குடிக்க சென்றது ஒரு குத்தமா?
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…