மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள மான்டலா மாவட்டத்தில் நடந்த கண்காட்சியில் பானி பூரி சாப்பிட்ட 97 குழந்தைகளுக்கு புட் பாய்சன் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அங்குள்ள கண்காட்சியில் நேற்று போடப்பட்டிருந்த பானி பூரி கடையில் பல குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் பானிபூரி வாங்கி சாப்பிட்டுள்ளனர். இதனையடுத்து இரவு அனைவர்க்கும் வாந்தி, மயக்கம் வந்ததாக கூறி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவர்கள் பரிசோதனைக்கு பிறகு அவர்கள் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அந்த பானிபூரி கடையில் இருந்து சேகரிக்கப்பட்ட உணவு மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று இரவு மண்டலா நாடாளுமன்ற உறுப்பினர் ஃபக்கன் சிங் குலாஸ்தே குழந்தைகளை நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார். இதனையடுத்து அந்த பானிபூரி கடைக்காரரை பிடித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…