தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, பீகார் உள்ளிட்ட 13 மாநிலங்கள், பிற மாநிலங்களுடன் மின்சாரத்தை பகிர்ந்துகொள்ள நேற்று இரவு முதல் மத்திய அரசு தடை விதித்துள்ளது. மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு 13 மாநிலங்கள் நிலுவைத் தொகை செலுத்தவில்லை என்று கூறி மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், மின்சார கொள்முதல் தடையால் தற்காலிகமாக எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், நிலுவை தொகை விரைவில் முழுமையாக செலுத்தப்படும் - தமிழக மின்வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…