Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஒன்னு இல்ல ரெண்டு இல்ல மொத்தமா 11 பெண்கள்....பிளே பாய் சிக்கியது எப்படி..!

madhankumar July 16, 2022 & 12:30 [IST]
ஒன்னு இல்ல ரெண்டு இல்ல மொத்தமா 11 பெண்கள்....பிளே பாய் சிக்கியது எப்படி..!Representative Image.

ஆந்திரா மாநிலம் குண்டூர் பகுதியை சேர்ந்தவர் அடப்பா சிவ சங்கர் பாபு. இவர், தான் ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும், மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிப்பதாகவும் திருமண தகவல் மையம் ஒன்றில் பதிவிட்டுள்ளார். இதனை வைத்து விவாகரத்து ஆன பெண்களை மட்டும் குறிவைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

அவரின் இந்த அண்டப்புளுகை நம்பி பல பெண்கள் இவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர், அவர்களை காதல் வலையில் வீழ்த்தும் இவர் திருமணமும் செய்துள்ளார். சில மாதங்கள் ஒன்றாக தங்கி குடும்பம் நடத்தும் இவர் வெளியூர் சென்றுவருவதாக கூறி வீட்டில் இருக்கும் பணம் நகை ஆகியவற்றை எடுத்து கொண்டு கம்பி நீட்டிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இப்படியாக 11 பெண்களின் வாழ்க்கையில் கபடி விளையாடியுள்ளார் இந்த சிவசங்கர் பாபு, ஒரு கட்டத்தில் மனைவிகள் அனைவர்க்கும் சந்தேகம் வர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரளித்த 11 பெண்களில் 7 பேர், ஐதராபாத்தில் உள்ள கோண்டாபூர் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். ஒரே பகுதியை சேர்ந்த 7 பெண்களை ஒரு ஆள் ஏமாற்றியுள்ளது அதிர்ச்சியளிக்கக்கூடியதாக இருக்கிறது.

மேலும் இந்த பிளே பாய் சிவசங்கர் மீது கொடுத்த புகாரின் பேரில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்பட விலை என கூறி 11 பெண்களும் குற்றம் சாட்டிவருகின்றனர். மேலும் எங்களை போன்று மற்ற பெண்களும் ஏமாற கூடாது என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளார். இந்த சம்பவம் தெலங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்