பீகார் மாநிலத்தில் 12 வயது சிறுவன் ஒருவனை அடித்து கொன்று உடலை சிதைத்து ரயில்வே டிராக் பக்கம் வீசி சென்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் போஜ்பூரைச் சேர்ந்த சிறுவன் தயா குமார். இவனுக்கு வயது 12. இவன் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறான். தற்போது அரையாண்டு தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது. இவரது சகோதரி 6 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த வாரம் அந்த சகோதரிக்கு 6 ஆம் வகுப்பிற்கான அரையாண்டு தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு எழுதிய நிலையில், சகோதரிக்கு பிட் பேப்பர் வழங்கி உதவுவதற்காக தயா குமார் பள்ளிக்குச் சென்றுள்ளார். தேர்வு அறைக்கு வெளியே இருந்து, தயா குமார் பிட் பேப்பரை தனது சகோதரிக்கு தூக்கி வீசி உதவியுள்ளார். அப்போது ஒரு பிட் பேப்பர் தவறுதலாக வேறு ஒரு மாணவிக்கு அருகே விழுந்துள்ளது.
அந்த மாணவி தனக்கு லவ் லெட்டர் கொடுத்துள்ளதாகத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளார். இந்நிலையில், அந்த மாணவி அதே பள்ளியில் படிக்கும் மாணவியின் சகோதரியிடம் இதனைக் கூறியுள்ளார். அதன் பின், அந்த மாணவியின் சகோதரன் தனது நண்பர்களுடன் சேர்ந்து தயா குமாரைத் தூக்கிச் சென்று சரமாரியாக அடிக்கத் தொடங்கினர்.
இதில், சிறுவனை அடித்தே கொன்ற அந்தக் கும்பல், உடலை சிதைத்து ரயில்வே டிராக் பக்கம் வீசி சென்றுள்ளது. தயா குமாரின் பெற்றோர் மகனைக் காணவில்லை என போலீசில் புகார் அளித்த நிலையில், நான்கு நாள்கள் கழித்து சிறுவனின் உடல் பாகங்களை போலீஸ் கைப்பற்றியது.
பிறகு விசாரணையில், மாணவியின் அண்ணன் உள்ளிட்ட 4 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. இவர்கள் நால்வரும் சிறார்கள் என்பதால், சிறார் சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…