Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கடனை அடைக்க மனைவி வேலைக்கு போனதால் ஆத்திரம்.. சைக்கோ கணவன் வெறிச்செயல்!!

Sekar October 20, 2022 & 13:49 [IST]
கடனை அடைக்க மனைவி வேலைக்கு போனதால் ஆத்திரம்.. சைக்கோ கணவன் வெறிச்செயல்!!Representative Image.

கேரளாவின் திருவனந்தபுரத்தில் 27 வயது இளைஞர் ஒருவர் தனது மனைவியைத் தாக்கியதோடு, அதை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பரப்பிய நிலையில், போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

திலீப் என அடையாளம் காணப்பட்டுள்ள அந்த குற்றவாளி, அவரது மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் மலையின்கீழு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

மனைவி தன் விருப்பத்திற்கு மாறாக வேலைக்கு சென்றதால் திலீப் அடித்துள்ளார். வீடியோவில், திலீப் தனது மனைவியை கொடூரமாக தாக்கியதை ஒப்புக்கொள்வதைக் கேட்கலாம். கடனை அடைப்பதற்காக வேலைக்குச் செல்வதாக அவரது மனைவி கூறுகிறார். கடைசியில் வேலையை விட்டு விலக வும் மனைவி சம்மதிக்கிறார்.

திலீவ் தாக்கியதில் அவரது மனைவியின் முகத்தில் இருந்து ரத்தம் வழிவதைக் காணலாம். வீடியோவின் முடிவில், திலீப் தனது மனைவி மீண்டும் வேலைக்குச் செல்ல மாட்டார் என்று கூறுகிறார். இந்த சம்பவத்தை அடுத்து அவரது மனைவி மலையின்கீழ் போலீசில் புகார் அளித்தார். 

இதன் அடிப்படையில் அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், திலீப்பை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்