தலைநகர் டெல்லியில் 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில், அவர் கூறிய தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
நாட்டின் தலைநகர் டெல்லியில் உள்ள பட்பர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து கூறப்பட்டதில், குற்றம் சாட்டப்பட்டவர் கூறிய ஹோட்டலுக்குத் தன்னை அழைத்துச் சென்றது தனது தாயார் எனக் கூறியுள்ளார். ஹோட்டலில், தனக்குத் தெரிந்த இளைஞரை தனது தாய் அறிமுகப்படுத்தியதாக அந்தப் பெண் கூறியுள்ளார்.
இவர், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை சிறுமியை பலமுறை பலாத்காரம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு, தனது தாயார் உதவியாக இருந்ததாக கூறப்படுகிறது. அது மட்டுமின்றி, இது குறித்து வெளியில் தெரிந்தாலோ, புகார் அளித்தாலோ கொலை செய்து விடுவோம் என மிரட்டலும் வந்துள்ளது. அந்தச் சிறுமி தைரியத்தை வளர்த்து முழு விவரங்களையும் தனது தாத்தாவிடம் கூறி, பிறகு இது காவல்துறைக்கு தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட இளைஞரைப் போலீசார் தேடி வருகின்றனர். உடந்தையாக இருந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…