ராணிபேட்டை: தண்டலத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிபேட்டை மாவட்டம் தண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் துளசி-கஸ்தூரி தம்பதி. இவர்களுக்கு இரு பெண் பிள்ளை மற்றும் ஒரு ஆண் பிள்ளை உள்ளது. குடிப்பழக்கத்திற்கு அடிமையான துளசி அவ்வப்போது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் சண்டை போடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று துளசி குடித்து விட்டு மனைவியிடம் சண்டைப் போட்டுள்ளார். இதைப்பார்த்து பயந்த அவரது 8வயது மகன் வீட்டிற்குள் ஓடியுள்ளார். அப்போது அறுந்து கிடந்த மின்கம்பியை எதிர்பாராத விதமாக மிதித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டுள்ளான். அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து வந்த ராணிபேட்டை போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…