புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே தொடக்க பள்ளியில் சித்ரா தேவி என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இப்படியாக அவர் பாடம் நடத்திக்கொண்டிருந்த நிலையில் திடீரென்று போதை ஆசாமி ஒருவர் வகுப்பறைக்குள் புகுந்து அவரை கன்னத்தில் அறைந்துள்ளார். அது மட்டுமில்லாமல் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பிறகு இருவருக்கும் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சித்ரா தேவி காவல் துறையில் புகார் அளித்துள்ளார். காவல் துறை விசாரிக்க ஆரம்பித்த நிலையில் இந்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…