தூத்துக்குடி மாவட்டம் நசரேத் அருகே காதல் திருமணம் செய்த இளம் சிட்டுகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அடுத்த சின்னமாடன் குடியிருப்பு பகுதியை சேர்ந்த தாசன் என்பவரின் மகன் விஜய் (16) என்பவரும்,அதேபகுதியை சேர்ந்த மூக்காண்டி மகள் மேகலாவும் (15) காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில் மேகலாவின் தந்தை அளித்த புகாரின் பேரில், விஜயை குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் கைது செய்த காவல்துறையினர், மேகலாவை மீட்ட் அவரது தந்தையிடம் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து சிறைவாசம் மேற்கொண்டு வந்த விஜய் ஜாமீனில் வெளியில் வந்து, விஜய், மேகலாவை அழைத்து சென்று குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் மேகலவின் பெற்றோர்கள் விஜயிடம் சென்று திருமணம் வயது வந்தவுடன் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக கூறி மேகலாவை அழைத்து சென்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை இருவரும் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். இதனால் பதற்றமடைந்த பெற்றோர்கள், அவர்களை தேடி வந்துள்ளனர். அப்போது வாலசுப்பிரமணியபுரத்தில் இருவரும் விஷம் அருந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளம் ஜோடிகள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…