கர்நாடக மாநிலத்தில் திருமணம் செய்ய விருப்பமில்லாமல் வீட்டை விட்டு வெளியேறிய இளைஞர் பர்தா அணிந்து சுற்றியுள்ளார். அவரை பிடித்து விசாரித்ததில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டம் அலமட்டி அணை அருகே பர்தா அணிந்துகொண்டு சந்தேகத்திற்கிடமாக பெண் ஒருவர் சுற்றி திரிந்துள்ளார். அவரை மடக்கி பிடித்த போலீசாருக்கு பின்னர்தான் தெரிந்தது தங்கள் பிடித்தது பெண் அல்ல ஆண் என, அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்ததில்,
ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த மாலிகார்ஜுன சாமி என்பது அந்த இளைஞர் பெயர் எனவும் அவரது சம்மதம் இல்லாமல் வீட்டில் திருமண ஏற்பாடுகள் செய்துவந்ததாகவும் அது பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் கூறியுள்ளார். மேலும் தன்னை யாரும் கண்டுபிடித்துவிட கூடாது என்பதற்காக பர்தா அணிந்து வெளியே சுற்றி வந்ததாகவும் கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…