சேலத்தில் இரவு நேரத்தில் கடைக்கு சென்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை இழுத்துச் சென்று முட்புதரில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாட்டம் கருப்பூர் அருகே வெள்ளக்கல்பட்டி பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் நேற்று இரவு சுமார் 9:00 மணி அளவில் அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் கடைக்கு சென்ற பெண் வரவில்லை. அவரது சகோதரர் தேடி உள்ளார். இதனை தொடர்ந்து அருகில் உள்ள முட்புதரில் இருந்து தனது சகோதரி வெளியே வந்ததை பார்த்துள்ளார்.
அங்கு மறைந்திருந்த மணிகண்டன் தப்பி ஓடிவிட்டார். அங்கு சென்று பார்த்தபோது காயமடைந்த நிலையில் கிடந்த சகோதரியை சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். இதுகுறித்து கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உடனடியாக ரோந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் துன்புறுத்தல் ஈடுபட்டாரா? என அக்கம் பக்கத்தில் இருந்து விசாரித்தபோது அவர் ரத்த கரையுடன் இருந்ததாக அங்கு உள்ளவர்கள் கருப்பூர் போலீசாரிடம் சொன்னதாக கூறப்படுகிறது. இதனை யடுத்து சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய (பொறுப்பு) ஆய்வாளர் பழனியம்மாள் மற்றும் உதவி ஆய்வாளர் மேனகா ஆகியோர் சம்பவம் குறித்து அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரித்தனர். இந்த வழக்கு தொடர்பாக அதே பகுதியில் வசித்து வரும் மணிகண்டன் என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மனநலம்பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…