Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இருசக்கர வாகனம், வேன் நேருக்கு நேர் மோதல் - இரண்டு கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலி

selvarani Updated:
இருசக்கர வாகனம், வேன் நேருக்கு நேர் மோதல் - இரண்டு கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலிRepresentative Image.

நெல்லை மாவட்டம் மானூர் அருகே இருசக்கர வாகனமும் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இருசக்கர வாகனத்தில் வந்த கல்லூரி மாணவர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் மானூர் அடுத்த வாகைகுளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெயராம் மற்றும் உச்சிமாகாளி. இவர்கள் இருவரும் நெல்லை மாவட்டம் மானூர் பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று கல்லூரி முடிந்து தங்களது இரு சக்கர வாகனத்தில் ஜெயராம் மற்றும் உச்சிமாகாளி ஆகிய இருவரும் சங்கரன்கோவில் சாலை வழியாக அவர்களது ஊருக்கு சென்றுள்ளனர்.

அப்போது எதிர்பாராத விதமாக அழகிய பாண்டிபுரம் அருகே இருசக்கர வாகனம் வரும்போது எதிரே வந்த வேன் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே கல்லூரி மாணவர்கள் இருவரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மானூர் போலீசார் விபத்து நடைபெற்ற இடத்தில் விசாரணை மேற்கொண்டதுடன் உயிரிழந்த இருவரின் உடலையும் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர் தொடர்ந்து விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர் இருவர் இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்