Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இருவரைக் காதல் செய்த பெண்… 4 மாத கர்ப்பிணியாக காதலனால் கொலை செய்யப்பட்ட கொடூரம்..

Gowthami Subramani November 02, 2022 & 18:55 [IST]
இருவரைக் காதல் செய்த பெண்… 4 மாத கர்ப்பிணியாக காதலனால் கொலை செய்யப்பட்ட கொடூரம்..Representative Image.

ஈரோடு மாவட்டத்தில், இருவரை காதல் செய்த பெண் 4 மாத கர்ப்பமாக இருந்த நிலையில், வீட்டில் கழுத்தை நெறித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ராயப்பாளையத்தைச் சேர்ந்த சென்னியப்பனின் மகள் பிருந்தா. இவர், 2 ஆண்டுகளுக்கு முன் கல்லூரியில் படித்து வந்த போது, கார்த்திக் என்பவரை காதலித்து வந்துள்ளார். அதே நேரத்தில், அவரது பக்கத்து வீட்டுப் பையனான அரவிந்த் என்பவரையும் காதலித்து வந்துள்ளார். இருவரையும் ஒரே நேரத்தில் காதல் செய்ததாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், திருமணம் செய்து கொள்ளும் நேரத்தில் யாரை திருமணம் செய்வது என்று நேரத்தில் குழம்பிய போது, கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். அரவிந்தை விட்டுப் பிரிந்து, ஒன்றரிய ஆண்டிற்கு முன்பு கார்த்திக்கை திருமணம் செய்து கொண்ட பிருந்தா, தனது முன்னாள் காதலனான அரவிந்த்திடமும்  ரகசியமாக அவ்வப்போது தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், 4 மாத கர்ப்பிணியாக இருந்த போதும், ஒரு நாள் அரவிந்தை நேரில் சந்திக்க பிருந்தா கேட்டிருக்கிறார். அதன் படி, கடந்த அக்டோபர் 27 ஆம் நாள் அன்று, கணவர் கார்த்திக் வெளியே சென்ற சமயத்தில் அரவிந்த் பிருந்தாவை சந்தித்துள்ளார். அரவிந்த் காதல் வார்த்தைகளை பேசி அவருடன் அழைத்த போது, பிருந்தா அவருடன் செல்ல மறுத்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து, ஒன்றாகச் சேர்ந்து வாழத் தான் முடியவில்லை. ஒன்றாகச் சேர்ந்து சாகலாம் எனத் தற்கொலைக்குத் தூண்டியுள்ளார். அதற்கு பிருந்தா தற்கொலை செய்வதற்கு பயமாக இருப்பதாகவும், தன்னைக் கொன்று விட்டு பின்னர் தற்கொலை செய்து கொள்ளுமாறும் அரவிந்திடம் கண்ணீர் மல்க கூறி கண்ணை மூடி நின்றுள்ளார் பிருந்தா.

இதில், பிருந்தாவைக் கழுத்தை நெரித்துக் கொன்ற அரவிந்த வீட்டில் இருந்து தப்பியோடினான். பிருந்தா மர்மமான முறையில் உயிரிழந்ததைக் கண்டு உறவினர்கள் தற்கொலை என நினைத்தனர். ஆனால், பிருந்தாவின் செல்போன் எண்ணை ஆராய்ந்து, இது கொலை என தெரியவந்துள்ளது.

இதனையடுத்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில், கொலை செய்து தப்பித்த அரவிந்தை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்