கேரளாவில் காதலனுக்கு விஷம் கொடுத்த சம்பவத்தில் அடுத்ததடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள். கடந்த 25 ஆம் தேதி கன்னியாகுமரி எல்லையை ஒட்டி கேரளாவில் அமைந்துள்ள பாறசாலை பகுதியை சேர்ந்த ஷாரோன் ராஜ் என்ற இளைஞர் தான் உயிருக்கு உயிராக காதலித்த காதலி கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து இந்த கொலை சம்பவத்தில் தொடர்ந்து பல திடிக்கும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துக்கொண்டிருக்கின்றன.
ஷாரோன் ராஜ் மரணம்:
ஷாரோன் ராஜ் (வயது 23) என்ற இளைஞர் நெய்யூரில் உள்ள ஒரு தனியார் காலேஜில் பிஎஸ்சி ரேடியாலஜி படித்துவந்தார். காலேஜ் செல்லும் வழியில்தான், கிரிஷ்மா என்ற பெண்ணை சந்தித்துள்ளார். பின்னர், காலப்போக்கில் இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு காதலாக மாறியது. இவர்களின் காதல் விவகாரம் இருவரின் வீட்டுக்குமே தெரியும் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில், கடந்த 14 ஆம் தேதி தன்னுடைய வீட்டில் யாரும் இல்லை என்று சொல்லி ஷாரோன் ராஜை வீட்டிற்கு அழைத்துள்ளார் கிரிஷ்மா. இதை நம்பி நண்பர் ஒருவருடன் ஷாரோன் ராஜ் காதலி வீட்டுக்கு சென்றிருக்கிறார். நண்பர் வீட்டின் வெளியில் நிற்க, ஷாரோன் ராஜ் மட்டும் காதலியின் வீட்டுக்குள் சென்றுள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து ஷாரோன் ராஜ் மற்றும் அவரது நண்பர் இருவரும் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
செல்லும் வழியில் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதையடுத்து அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது, காதலி வீட்டில் கசாயம் மற்றும் குளிர்பானம் குடித்ததாக கூறியுள்ளார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், கடந்த 25 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி ஷாரோன் ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவருடைய தந்தை ஜெயராஜன் மகனின் காதலி தான் குளிர்பானத்தில் எதையோ கலந்து கொடுத்து கொலை செய்துவிட்டதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீசில் புகார் அளித்தார். அதன்பின் போலீசார் விசாரணையும் ஆரம்பமானது..
கிரிஷ்மாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, ஷாரோன் வீட்டிற்கு வந்ததும் ஜூஸ் கொடுத்ததாகவும், அதன் பிறகே அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதாகவும் கிரிஷ்மா கூறியுள்ளார். அதன்பின் அந்த ஜூஸ் பாட்டிலை பார்த்தபோதுதான் அது காலாவதியாகிவிட்டது என்பது தெரியவந்ததாகவும் கிரிஷ்மா போலீசாரிடம் கூற.. உடனே போலீஸார், அந்த ஜூஸ் பாட்டில் எங்கே? என்று கேட்டுள்ளனர். அதற்கு கிரிஷ்மா கோபத்தில் அதை தூக்கி பாதாள சாக்கடையில் எறிந்துவிட்டேன் என்று கூறியுள்ளார். இங்குதான் போலீஸாருக்கு முதல் சந்தேகம் ஏற்பட்டது.
சந்தேகத்தின் பேரில் கிரிஷ்மாவிடம் கடந்த 30 ஆம் தேதி க்ரைம் பிராஞ்ச் போலீஸார் தங்கள் பாணியில் விசாரணையை தொடங்கினர். அப்போது, கிரிஷ்மா பல திடுக்கிடும் தகவல்களை கூறியது போலீஸாரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வாக்குமூலத்தில்... நானும், ஷாரோன் ராஜும் உயிருக்கு உயிராகவே காதலித்து வந்தோம். திருமணம் செய்யவும் முடிவு செய்தோம். அப்போதுதான், எங்களுக்கு தெரிந்த ஜோதிடரிடம் எனது ஜாதகத்தை காண்பித்தேன். அதை பார்த்த அவர், என் ஜாதகப்படி எனது முதல் கணவர் இறந்துவிடுவார் எனக் கூறினார். இதனால் எதிர்காலத்தை பற்றி பயம் வந்தது. எனவே ஷாரோன் ராஜ் மூலமே எனது ஜாதகத்துக்கு பரிகாரம் செய்ய முடிவு செய்தேன்.
அதையடுத்து, கடந்த மாதம் ஷாரோன் ராஜை சந்தித்த நான், என்னை ஒரு சம்பிராயத்துக்காக திருமணம் செய்யுமாறு வற்புறுத்தினேன். அதன்படி, ஒரு கோயிலுக்கு சென்ற நாங்கள், மாலை மட்டும் மாற்றி திருமணம் செய்தோம். இது வேறு யாருக்கும் தெரியாது. பின்னர் அவனை கொலை செய்ய முடிவுசெய்து, கடந்த 14-ம் தேதி ஷாரோனை எனது வீட்டுக்கு வரவழைத்தேன். அப்போது, எங்கள் வீட்டில் இருந்த கசாயத்தை காய்ச்சி அதில் பூச்சி மருந்தை கலந்தேன். பின்னர், உன்னால் இவ்வளவு கசப்பையும் குடிக்க முடியுமா என்பது போல விளையாட்டாக பேச்சுக் கொடுத்து, இந்த கசாயத்தை குடிக்க வைத்தேன். அவனும் சவால் என நினைத்து அதை குடித்தான். இவ்வளவு கசப்பாக இருக்கு வேற எதாவது கொடு என்று கேட்கும்போது தான் ஜூஸ் கொடுத்தேன் என்றார். இதனால் தா ஷாரோன் இறந்ததாக கூறினார்.
இதையடுத்து, போலீஸார் கிரிஷ்மாவை கைது செய்து காவலில் வைத்திருந்தனர். இந்தநிலையில், நவம்பர் 31 ஆம் தேதி காவல் நிலையத்தில் உள்ள கழிவறையில் வைக்கப்பட்டிருந்த கிருமிநாசினியை குடித்து, தற்கொலை செய்துக்கொள்ள முயற்சி செய்துள்ளார். உடனடியாக அவரை போலீஸார் மீட்டு திருவனந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
வாக்குமூலத்தின் படி அது உண்மையாக இருந்தாலும், ஆனால் மற்றொரு காரணமும் இந்த கொலையில் இருக்கிறது. அதாவது, கிரிஷ்மாவிற்கு வீட்டில் வேறொருவருடன் நிச்சயம் முடிந்துவிட்டது. இதனால், ஷாரோஜ் ராஜை எப்படியாவது கழட்டிவிட முடிவு செய்துள்ளார். ஆனால், இவர்கள் காதலிக்கும்போது நெருக்கமாக் இருந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், பல இடங்களுக்கு ஜோடியாகவும் சுற்றி வந்துள்ளனர். அப்போது, ஷாரோன் கிரிஷ்மாவை பல வண்ணங்களில் போட்டோ எடுத்து வைத்துள்ளார். வீட்டில் கிரிஷ்மாவிற்கு கல்யாண பேச்சு எடுத்தவுடன் ஷாரோனிடம் அந்த போட்டோக்களை எல்லாம் அழிக்குமாறு சொல்லுயிருக்கிறார். ஆனால், ஷாரோன் போட்டோவையும் அழிக்க முடியாது, உன்னையும் விட மாட்டேன் என்று அழுத்தமாக கூறியிருக்கிறார்.
இதனால், எதிர்காலம் பாதித்துவிடுமோ என்று நினைத்து தான் இந்த கொலையை செய்திருக்கிறார் என்று பலரும் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், இந்த கொலைக்கு கிரிஷ்மாவோடு மேலும் பலருக்கும் தொடர்பு இருக்கும் என்று போலீஸ் வட்டாரம் தெரிவிக்கிறது. பாத்ரூமில் தற்கொலை முயற்சி செய்தது கூட டிராமா என்று போலீஸாருக்கு தெரியவர, அவர் மீது தற்கொலை முயற்சி என்று இன்னொரு வழக்கையும் பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து பலரிடம் மேலும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, கிரிஷ்மாவின் அம்மா ஷாரோன் வீட்டிற்கு வந்ததை பார்த்துள்ளார். ஆனாலும், அவர் உடனடியாக வீட்டுக்கு போகவில்லையாம். இதுதான் போலீசாருக்கு சந்தேகத்தை அதிகப்படுத்தியுள்ளது. மேலும், விசாரித்ததில் விஷம் கொடுக்கப்பட்டது சம்பந்தமான ஆதாங்களை அவர் தான் அழித்துள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து கிரிஷ்மாவின் அம்மா மற்றும் மாமாவை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கிரிஷ்மா ஷாரோனிடம் பலமுறை கல்யாணத்தை பற்றி கூறியும் காதலி எப்படியும் மனம் மாறிவிடுவாள் என்று நம்பியுள்ளார். கிரிஷ்மாவை உயிருக்கு உயிராகவும் காதலித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், மரண படுக்கையிலும் கூட என் கிரிஷ்மா எனக்கு துரோகம் செய்யமாட்டாள் என்று முனகி கொண்டே இருந்தாராம். அப்போது, அவரின் உறவினர்கள் உன் காதலி தான் உனக்கு விஷம் கொடுத்திருக்கிறாள் என்று சொல்ல, அவள் அப்படி செய்திருக்க வாய்ப்பே இல்லை.. அவள் எனக்கு ஜூஸ்தான் கொடுத்தாள்.. விஷம் கொடுக்கவில்லை.. அவளை தப்பா பேசாதீங்க என்று சொல்லிக்கொண்டிருக்கவே ஷாரோன் உயிர் பரிதாபமாக பிரிந்தவிட்டது.
இதனிடையே, இன்னொரு தகவலும் போலீஸ் விசாரணையில் வெளியாகியுள்ளது. அதாவது, விஷம் குடித்ததால், உயிர் பிறிந்துக்கொண்டிருந்த வேளையிலும், கிரிஷ்மாவிற்கு மெசேஜ் அனுப்பி இருக்கிறார். "நீ கவலைப்படாதே... ஆனால், என்னை மறக்காமல் இரு.. அதுவே எனக்கு போதும்.. "என்று மெசேஜ் அனுப்பி உள்ளார். ஒருவருடமாக உயிருக்கு உயிராக காதலித்த காதலனை இதயமே இல்லாமல் கொலை செய்திருக்கும் கொடூரம் அனைவரது மனதையும் திகைக்க வைத்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…