செல்போன் திருடியதாக கைது செய்யப்பட்ட தினேஷ், காவல்துறை தாக்கியதால் தான் இறந்து விட்டதாக அவரது மனைவி காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திருட்டு வழக்கில் துரைப்பாக்கம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட தினேஷ், விசாரணைக்கு பின் அவரது மனைவி கெளசல்யாவுடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
வீடு திரும்பிய தினேஷ் உடல் நலக்குறைவு காரணமாக ஸ்டேன்லி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்து மருத்துவர் , அவர் உயிரிழந்து விட்டார் என தெரிவித்தார். இது குறித்து புகார் தெரிவிக்க சென்னை வேப்பேரியில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகம் வந்த கெளசல்யா, தன்னுடைய கணவர் காவல்துறையினர் தாக்குதலால் தான் இறந்து விட்டார் எனவும், தனக்கும் தன் பிள்ளைக்கும் யாரும் ஆதரவு இல்லை என்பதால் அரசு இழப்பீடாக 25லட்ச ரூபாய் வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.
உயிரிழந்த தினேஷ் விவகாரத்தில், சம்பந்தப்பட்ட காவல்நிலைய உதவி ஆய்வாளர்கள் ராஜாமணி, கலைச்செல்வி மற்றும் தலைமை காவலர்கள் பார்த்தசாரதி,சந்திரசேகர் ஆகிய நான்கு பேரும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பணியிட மாற்றம் செய்து காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…