தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஆபாச படங்களை வெளியிட்டுவிடுவேன் என மிரட்டிய ஃபேஸ்புக் நண்பனை மற்றொரு ஃபேஸ்புக் நண்பனை வைத்து தீர்த்துக்கட்டிய இளம் பெண்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பிரசாந்தி ஹில்ஸ் பகுதியை சேர்ந்த திருமணமான சுவேதா ரெட்டி என்பவருக்கும், அம்மர்பேட்டையை சேர்ந்த யாஷ்மா குமார் என்ற புகைப்பட கலைஞருக்கும் ஃபேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி வீடியோ காலில் பேசும்போது சுவேதா அந்தரங்கமாக இருந்துள்ளார். இது நீண்ட நாட்கள் தொடர்ந்துள்ளது. இதனிடையே யாஷ்மா குமார் திடீரென ஒரு நாள் என்னை திருமணம் செய்துகொள் அப்படியே உன்னுடைய சொத்தை எனது பெயருக்கு எழுதி வை என மிரட்டியுள்ளார்.
இதற்கு உடன்படவில்லை என்றல் உனது அந்தரங்க புகைப்படங்களை உனது கணவருக்கு அனுப்பிவிடுவேன் என கூறியுள்ளார். இதனால் செய்வதறியாது திகைத்த சுவேதா தனது மற்றொரு ஃபேஸ்புக் நண்பர் அசோக் என்பவற்றின் உதவியை நாடியுள்ளார். இருவரும் இணைந்து யாஷ்மா குமாரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். வழக்கமாக யாஷ்மா குமார் பயணிக்கும் சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் மடக்கிய அசோக், தன் கூட்டாளிகளுடன் யாஷ்மா குமாரை சரமாரியாக அடித்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த யாஷ்மா குமார் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அக்கம்பக்கத்தினர் தெரிவித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளார். பின்னர் இதில் சுவேதாவிற்கும் தொடர்பு இருப்பது தெரிந்ததையடுத்து அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…