Wife Day : இந்தியாவில் மனைவியர் தினம் கொண்டாட வேண்டும் என ராம்தாஸ் அத்வாலே கூறினார்.
ராம்தாஸ் அத்வாலே
மகாராஷ்டிரா பாஜக தலைமையிலான கூட்டணியில் உள்ள இந்திய குடியரசுக் கட்சியின் தலைவா் ராம்தாஸ் அத்வாலே தற்போது சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை மந்திரியாக உள்ளார். நேற்று மகாராஷ்டிர மாநிலம் சாங்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
மனைவி தினம்
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், ”தாய் நம்மைப் பெற்று நமக்கு வாழ்க்கையை உருவாக்கி தந்தார். அந்த வாழ்க்கைக்கு துணையாக மனைவி முக்கியமான காலகட்டத்தில் வருகிறார். ஒவ்வோா் ஆண்மகனின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாா் என கூறுவார்கள். இங்கு பெரும்பாலானவா்களுக்கு அந்த நபா் மனைவியாகத்தான் இருப்பார். எனவே மனைவியா் தினமும் கொண்டாடப்பட வேண்டும்” என கூறினார்.
அமெரிக்கா உட்பட பல நாடுகளில் மனைவியை பாராட்டும் விதமாக மனைவியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…