சமூக வலைதளமான ஃபேஸ்புக் நேரலையில் வீடியோ எடுத்தபடி, கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலத்தில், மகாராஜ் கஞ்ச் மாவட்டத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் குறித்து, தகவல் அறிந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து மேற்கொண்ட விசாரணையில் காதலித்த பெண்ணிற்கு அவரது வீட்டில் வேறொரு நபருக்கு திருமணம் செய்து வைக்க நடவடிக்கை எடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு காதலியும் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால், மனவேதனை அடைந்த அந்த இளைஞர், பேஸ்புக் வீடியோவில் காதலி மற்றும் அவரது குடும்பத்தினரின் பெயரைக் கூறியவாறே, கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…