தமிழ்நாட்டில் முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் பயனாளிகள் அனைவருக்கும் ஆதார் எண்ணை கட்டாயமாக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு திட்டங்களுக்கு ஏற்கனவே ஆதார் கட்டாயமாக்கப்பட்டுவிட்ட நிலையில், தமிழ்நாடு அரசும் தற்போது தனது திட்டங்களில் ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயமாக்கி செயல்படுத்த ஆரம்பித்துள்ளது.
அந்த வகையில், முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயன் பெறுவோர் ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயமாக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் என்பது தமிழக சமூக நலத் துறை சார்பில் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ், பெண் குழந்தைகளின் பெயரில் ரூ.50 ஆயிரம் வைப்பு நிதியாக தமிழ்நாடு மின் விசை நிதி நிறுவனத்தில் வைக்கப்படுகிறது.
ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும்பட்சத்தில் தலா ரூ.25 ஆயிரம் வீதம் பிரித்து வைப்பு நிதி செலுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…