Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

திருப்பூர் அருகே கோர விபத்து...3 பேர் உடல் நசுங்கி பலி..!

madhankumar August 05, 2022 & 10:37 [IST]
திருப்பூர் அருகே கோர விபத்து...3 பேர் உடல் நசுங்கி பலி..!Representative Image.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கார் மற்றும் பேருந்து ஒன்றுக்கொன்று நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த கொடுவாய் என்ற பகுதியில் தாராபுரத்தை நோக்கி திருப்பூரிலிருந்து கார் ஒன்று வந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அந்த காரில் 5 ஆண்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது திருப்பூரில் இருந்து தாராபுரத்தை நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்துள்ளது, இந்நிலையில் கொடுவை அருகே இருக்கும் காக்கா பாளையம் என்ற பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த பேருந்து மீது பயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில் அப்பளம் போல் நொறுங்கிய காரில் பயணம் செய்த 5 பேரில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் மற்ற 2 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விஸ்ட்ரைனை நடத்தி வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்