காவிரியாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக காவிரி கரையோர பகுதியில் உள்ள வீடுகள் அணைத்து வெள்ளநீரால் சூழப்பட்டுள்ளது. இதனையடுத்து, வீட்டு வசதிதுறை அமைச்சர் முத்துசாமி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
கர்நாடக மாநிலத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் அணையில் இருந்து 2.10 லட்சம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஈரோட்டில் காவிரி கரையோர பகுதிகளான காவிரி வீதி, முனியப்பன் கோவில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 200க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மேலும் அந்த பகுதிகளில் இருந்த மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்ட வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை செய்து தர வேண்டும் என வருவாய் துறையினருக்கு உத்தரவிட்டார். மேலும் பொதுமக்கள் ஆற்றில் குளிப்பது, துணி துவைப்பது, செபி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும் மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…