தமிழ் திரைப்பட நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் டெல்லிக்கு ஜெயிலர் படப்பிடிப்புக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், அடுத்த வாரம் ஆந்திராவில் ஜெயிலர் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே டெல்லிக்கு அவர் வேறு பணிக்காக சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நடிகர் ரஜினிகாந்த் சற்றுமுன் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றுள்ளது.
மேலும், இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டு மக்களின் ஆன்மிக உணர்வு ஆளுநரை மிகவும் ஈர்த்திருக்கிறது. அரசியல் குறித்து விவாதித்தோம். ஆனால் அதை உங்களிடம் தற்போது சொல்ல முடியாது” என கூறியுள்ளார்.
மேலும், ரஜினிகாந்த்தின் டெல்லி பயணம், ஆளுநர் சந்திப்பு என அடுத்தடுத்து அதிரடி காட்டி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…