80's 90'sகளில் தமிழ் திரையுலகின் ஆல் ரவுண்டராக வலம் வந்த டி.ராஜேந்தர் உடல்நிலை மோசமடைந்துள்ள நிலையில், அவரை வெளிநாடு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க உள்ளதாக அவரது மகனும் நடிகருமான சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக டி.ராஜேந்தருக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.
அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்பப்பட்ட நிலையில், அவரை மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அடுத்த சில நாட்களில் அது குறித்து முடிவெடுக்கப்படும் என்று ராஜேந்தர் குடும்பத்தினருக்கு நெருக்கமான வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில், டி.ராஜேந்தர் வயிற்றில் சிறிய ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அதற்காக உயர் சிகிச்சை வழங்க தனது தந்தையை வெளிநாடு அழைத்துச் செல்வதாக நடிகர் சிலம்பரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…