கேரளாவை சேர்ந்த நடிகர் ஸ்ரீஜித் ரவி இவர் 2005-ம் ஆண்டு மயூகம் என மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். மேலும் அதே ஆண்டு வெளியான சாந்து போட்டு என்ற படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். மேலும் இவர் 2014இல் கும்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார், அதற்கடுத்து வேட்டை, மதயானை கூட்டம், கதகளி, அசுரவதம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், நடிகர் ஸ்ரீஜித் ரவி குழந்தைகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக திருச்சூர் மேற்கு போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்தனர். ஸ்ரீஜித் ரவி இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டர்.
இந்த சம்பவக் திரிசூர் மாவட்டம் அய்யந்தோல் பகுதியில் உள்ள எஸ்.என்.பார்க் பகுதியில் கடந்த 4ஆம் தேதி நடந்ததாக கூறப்பட்டுள்ளது. இவர் பொன்னகவில் விளையாடிக்கொண்டிருந்த 11 மற்றும் 5 வயது பெண் குழந்தைகள் முன்பு ஆடையின்றி தோன்றியதாக தெரிகிறது. இதையடுத்து குழந்தைகள் இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தனர். அதன் பின்னர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பேரில் திரிசூர் போலீசார் பூங்கா அருகில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது அதில் கருப்பு நிற காரில் வந்த நபர்தான் இந்த செயலை செய்தது என தெரியவந்தது. அது ஸ்ரீஜித் தான் என கூறி கைது செய்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…