கடலூர் வண்ணாரப்பாளையத்தை சேர்ந்த 47 வயதான அரசு ஊழியர் ஒருவர் தனது குடும்பத்தாருடன் நேற்று இரவு உணவு உண்டுவிட்டு வீட்டின் வராண்டாவில் படுத்து துங்கியுள்ளார். மேலும் வீட்டின் பின் கதவை மூட மறந்துள்ளார்.
அவரின் மூத்த மகள் வீட்டின் தனி அறையிலும், 19 வயதான இளைய மகள் வராண்டாவில் துங்கியுள்ளார். அப்போது அவரின் வீட்டு பின்பக்க கதவை திறந்து 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் உள்ளே புகுந்துள்ளான். பின்னர் வீடு முழுவதும் அலசியும் நகை, பணம் என ஏதும் கிடைக்கவில்லை, இதனால் அங்கிருந்து புறப்படும்போது அவனது பார்வை வராண்டாவில் தூங்கிக்கொண்டிருந்த 19 வயது கல்லூரி மாணவி மீது விழுந்துள்ளது.
உடனே அந்த மாணவியின் வாயை பொத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளான், அதனால் அந்த மாணவி அலறியுள்ளார், அந்த சத்தம் கேட்டு கண்விழித்த அரசு ஊழியர் அவனை பிடிக்க முயன்றுள்ளார் அனால் அவன் அங்கிருந்து திமிறி ஓடியுள்ளான், தெரு முனையில் இருந்த றன்று சிறுவர்களும் அவனுடன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இதுகுறித்து அரசு ஊழியர் அளித்த புகாரின் பேரில் தேவனாம்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த 3 சிறுவர்களையும் தேடிவந்தனர். இதற்கிடையே தவனாம்பட்டினம் முனீஸ்வரன் கோவில் அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சிறுவன் ஒருவன் சுற்றி திருந்துள்ளான், அவனை பிடித்து விசாரித்ததில் அவன்தான் அரசு ஊழியர் வீட்டில் திருட முயன்றவன் என தெரியவந்தது. இதனையடுத்து அவனை கைது செய்த போலீசார் அவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். மேலும் அவனுடன் வந்த 2 சிறுவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…