தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் இலவச வேட்டி-சேலைகளை புதிய டிசைனில் தரமாக வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
2023 பொங்கலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், மக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் இலவச வேட்டி-சேலை வழங்குவது குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து, 10 ஆண்டுகளுக்கு பிறகு புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி சேலைகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 15 டிசைன்களில் மற்றும் பல நிறங்களில் சேலையும், 5 டிசைன்களில் வேட்டியும் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
மேலும் இலவச வேட்டி-சேலைகளை வரும் ஜனவரி 10 ஆம் தேதிக்குள் வழங்கி முடிக்கவும் உத்தரவிட்டப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…