தமிழகத்தில் இனி கருவிழி பதிவு மூலமும் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி மற்றும் மலிவு விலையில் மளிகை பொருட்கள் ரேஷன் கார்டில் உள்ளவர்களின் கைரேகை பதிவு மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் கைரேகை பதிவுகள் சில சமயம் சரியாக வேலை செய்யாததால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்களை வாங்குவதற்கான மின்னணு பதிவேட்டில், கைரேகை பதிவுக்கு பதிலாக குடும்ப அட்டைதாரர்கள் கருவிழி மூலமாக பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும், கருவிழி அடையாளம் மூலம் பொருட்கள் வழங்கும் திட்டம் விரைவில் அமலுக்கு வரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழகத்தில் உள்ள நியாய விலைக்கடைகள் அனைத்திலும் கழிவறை கட்டாயம் அமைக்கப்படும் என்றும் கடைக்கு பொருட்கள் வாங்க காத்திருப்போர் அதனை பயன்படுத்திக்கொள்ளலாம் என கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…