குஜராத்தின் வதோதராவைச் சேர்ந்த பெண்ணின் முதல் கணவர் 2011-ம் ஆண்டு சாலை விபத்தில் மரணமடைந்துவிட்டார். அப்போது அவருக்கு 14 வயதில் பெண் குழந்தை இருந்துள்ளது. இதை தொடர்ந்து அந்த பெண் திருமண தகவல் இணையதளம் மூலம் வரன் தேடி வந்துள்ளார். அப்போது விராஜ் வர்தன் என்பவரை சந்தித்துள்ளார். 2014ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்ட அவர்கள், காஷ்மீருக்கு தேனிலவுக்குச் சென்றுள்ளனர்.
ஆனால் விராஜ் வர்தன் தாம்பத்ய உறவுக்கு சம்மதிக்கவில்லை பல நாட்கள் சாக்குப்போக்குகளை கூறிக்கொண்டே இருந்துள்ளார். அந்த பெண் அவரை வற்புறுத்திய கேட்ட போது, சில ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யாவில் இருந்தபோது ஒரு விபத்தில் தாம்பத்திய உறவில் ஈடுபடுவதற்கான திறனை இழந்துவிட்டதாகக் கூறியுள்ளார். மேலும் இதனைக் குணப்படுத்த ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து 2020ம் ஆண்டு கொல்கத்தாவிற்கு உடல் எடையைக் குறைக்கும் அறுவை சிகிச்சைக்காகச் சென்றுள்ளார்.
மனைவி தொடர்ந்து இது குறித்துக் கேட்டதற்கு ஒரு வழியாகத் தான் பிறவியில் பெண் என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். விஜயதா என்று இருந்த அவர் பாலின மாற்ற அறுவை சிகிச்சை மூலம் ஆணாக மாறி விராஜ் வர்தன் என்று பெயர் மாற்றம் பெற்றுள்ளார்.
இந்த அதிர்ச்சியான சம்பவத்தைத் தெரிந்துகொண்ட பாதிக்கப்பட்ட பெண்மணி, கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினர் மேல் புகார் அளித்துள்ளார். அதில் மேலும் அவர் கணவர் அவரிடம் இயற்கைக்கு அல்லாத உடலுறவில் ஈடுபடத் துன்புறுத்துவதாகவும், இதைப் பற்றிப் பேசினால் மிரட்டுவதாகவும் குறிப்பிட்டதுள்ளார்.
புகாரின் பெயரில் கோத்ரி காவல்நிலைய இன்ஸ்பெக்டர் எம்.கே.குர்ஜார், விராஜ் வர்தனை டெல்லியிலிருந்து கைது செய்து வதோதரா அழைத்துவந்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…