திண்டுக்கல்லில் குடிபோதையில், நண்பர்களுடன் சேர்ந்து தான் பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல்லில் உள்ள நாகல்நகர் பகுதியில் வசிக்கும் லிங்கமூர்த்தி (வயது 47) என்பவர் சமையல் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அதீத குடிப்பழக்கம் உள்ளதால், இவருக்கும் இவரது மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டு, மனைவி பிரிந்து சென்றுவிட்டார்.
மேலும் இவருக்கு தற்போது 12 வயதில் ஒரு மகளும் உள்ளார். மனைவி பிரிந்தாலும், மகளுடன் தனியாக வசித்து வந்த லிங்கமூர்த்தி அடிக்கடி சமையல் வேலைக்கு செல்வதால், தான் வீட்டில் இல்லாதபோது, தனது மகளை தனது நண்பரான கண்ணன் (வயது55) என்பவரது வீட்டில் விட்டு செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
இந்நிலையில், குடிபோதையில் லிங்கமூர்த்தி அவரது நண்பர் கண்ணன் ஆகிய இருவரும் சேர்ந்து மகள் என்றும் பாராமல் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த கொடுமைக்கு மத்தியில், பாரதிபுரத்தில் அரிசி கடை நடத்தி வரும் முகமது ரபிக் (வயது 60) என்பவருக்கும் சிறுமியை விருந்தாக்கியதாகக் கூறப்படுகிறது.
பாலியல் அத்துமீறலால் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, சிறுமி கர்ப்பமாக இருப்பதை மருத்துவர் கண்டுபிடித்துள்ளார். இதையடுத்து உடனடியாக குழந்தைகள் நல அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.
அப்போதுதான் தனது தந்தை மற்றும் தந்தையின் நண்பர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை சிறுமி தெரிவித்துள்ளார். இதையடுத்து குழந்தைகள் நல அலுவலர் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இந்த விவகாரம் குறித்து புகார் அளித்தார்.
குழந்தைகள் நல அலுவலரின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், தந்தை லிங்கமூர்த்தி மற்றும் அவரது நண்பர்கள் கண்ணன் மற்றும் முகமது ரபிக் ஆகியோரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
அதீத குடிப்பழக்கத்தால், பெற்ற மகளை நண்பர்களுடன் சேர்ந்து தந்தையே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் திண்டுக்கல் நகரையே உலுக்கியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…