துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தை ஏற்பட்டதைத் தொடர்ந்து, மீண்டும் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால், 3 பேர் பலியான சம்பம மீண்டும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கி மற்றும் சிரியா எல்லையில் கடந்த 6 ஆம் தேதி அதிகாலை காசியான்டெப் நகரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 7.8 என்ற ரிக்டர் அளவில் பதிவிட்டிருந்தது. இந்த நிலநடுக்கமானது ஒட்டுமொத்த துருக்கியையும் உலுக்கியதாக அமைந்தது.
இதனால், பல்வேறு இடங்களில் அடுக்கு மாடிக் கட்டிடங்கள் சரிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கி தவித்தனர். இந்த நிலநடுக்கத்தால், சுமார் 47 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கான மீட்புப் பணிகள் இன்றும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு மீண்டும் பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 என்ற அளவில் பதிவாகியுள்ளது.
இது தெற்கு ஹடாய் மாகாணமாக அனடோலுவில் ஏற்பட்டது. இந்த இரண்டாவது புதிய நிலநடுக்கங்களில் குறைந்தது 3 பேர் மரணமடைந்தனர். மேலும், 213 பேர் காயமடைந்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…