ஒரு சேவல் கொலை பண்ணிருக்குனு சொன்ன உங்களால நம்ப முடியுதா? நாம் எந்த ஒரு உயிரனங்களையும் சாதாரணமாக நினைத்துவிடக்கூடாது என்பதற்கு உதாரணம் தான் இந்த கொலை சம்பவம்.
அயர்லாந்து கில்லாஹார்னியாவை சேர்ந்தவர் ஜாஸ்பர் க்ராஸ் (67). ஓய்வு பெற்ற குதிரை பயிற்சியாளரான இவர் வீட்டில் செல்லமாக ஒரு சேவலை வளர்த்துவந்துள்ளார். இந்த நிலையில், சென்ற வருடம் ஏப்ரல் 28 ஆம் தேதி தனது தோட்டத்தில் வெளியே சென்றபோது ஆசையாய் வளர்த்த சேவல் அவரின் இடது காலில் பின்னால் இருந்து தாக்கியுள்ளது. பறவைகளுக்கு ஆயுதமே அதன் நகங்கள் தான்.
அந்த நகம் தான் தற்போது ஒரு உயிரை பறித்துள்ளது. அதாவது, அந்த சேவல் அவரை தாக்கியதுடன் ஜாஸ்பர் காலில் இருந்து இரத்தம் பீச்சி அடித்து வெளிவந்துள்ளது. ஏற்கனவே இருதய நோயாளியான ஜாஸ்பர் இந்த காயத்தால் அதிகளவு இரத்தத்தை இழந்துள்ளார்.
இதனால் மயக்கம்போட்டு கீழே விழுந்துள்ளார், உடனடியாக அவரது மகள் பார்த்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், அந்த நாளே பிற்பகல் 3.24 மணியளவில் அவர் இறந்துவிட்டாராம். இதுகுறித்து மருத்துவர்களிடம் விசாரித்ததில், இருதய நோயாளியான ஜாஸ்பர் நிறைய இரத்தத்தை இழந்ததால், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என்று தெரிவித்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…