மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய பாதுகாப்புத் துறையில் புதிய ஆட்செர்ப்பு திட்டமான அக்னிபாத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததன் மூலம் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு வரலாற்று சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ், இளைஞர்கள் குறுகிய காலத்திற்கு ஆயுதப் பணிகளில் சேர வாய்ப்பு வழங்கப்படும்.
டெல்லியில் செய்தியாளர்களிடையே பேசிய ராஜ்நாத் சிங், ஆயுதப்படைகளில் இளைஞர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் மேலும், "இது அவர்களுக்கு புதிய தொழில்நுட்பங்களைப் பயிற்றுவிப்பதற்கும், அவர்களின் உடல்நிலையை மேம்படுத்துவதற்கும் உதவும். இந்தத் திட்டம் பல்வேறு துறைகளில் புதிய திறன்களுடன் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும்" என்றார்.
ஒட்டுமொத்த தேசமும் குறிப்பாக நமது இளைஞர்கள் ஆயுதப்படைகளை மரியாதையுடன் நடத்துகிறார்கள் என்று பாதுகாப்பு அமைச்சர் கூறினார். ஒவ்வொரு குழந்தையும் தங்கள் வாழ்நாளில் ஏதாவது ஒரு கட்டத்தில் ராணுவ சீருடையை அணிய விரும்புகிறது என்று அவர் கூறினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…