அல்-கொய்தா தலைவர் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். இச்சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அல்கொய்தா இயக்கத்தின் முன்னள் தலைவராக பின்லேடன் இருந்தபோது அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தாக்கப்பட்டது. இச்சம்பவம் நடந்த பின்னர் அமெரிக்க ராணுவம் பின்லேடனை சுட்டு கொலை செய்தது..
இந்நிலையில், அல்கொய்தா இயக்கத்தின் தற்போதைய தலைவராக இருந்து வந்த அய்மான் அல் ஜவாஹிரி என்பவர் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் அய்மான் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இச்சம்பவம் ஆப்கானிஸ்தானில் மட்டுமின்றி உலக நாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…