பாகிஸ்தானில் பெய்த கனமழை காரணமாக ஏற்ப்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 320 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தானில் கனமழை, காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 320ஆக அதிகரித்துள்ள நிலையில், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நேரில் சென்று பார்வையிட்டார். கடந்த 5 வாரங்களாக பெய்துவரும் தொடர் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட பலுசிஸ்தான் மாகாணத்தில் சுமார் 13,000 வீடுகள் வெள்ளத்தில் முழுமையாக முழ்கியுள்ளன. இதுவரை அந்த மாகாணத்தில் 46 சிறுவர்கள் உள்பட 127 பேரும், கராச்சி, சிந்து மாகாணங்களில் 70 பேரும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனைதொடர்ந்து, பலுசிஸ்தான் மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. 30 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 அலகுகளாக பதிவாகியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…