Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

முகமது நபியை அவமதித்தல் கொலை செய்வோம்....அல்-கய்தா...!

madhankumar June 09, 2022 & 11:02 [IST]
முகமது நபியை அவமதித்தல் கொலை செய்வோம்....அல்-கய்தா...!Representative Image.

முகமது நபியை அவமதிக்கும் யாரையும் யோசிக்காமல் கொலை செய்வோம் எனவும் தற்கொலை படை தாக்குதல் நடத்துவோம் என அல்-கய்தாவின் தெற்கு ஆசிய கிளையானது எச்சரிக்கை விடுத்துள்ளது.

முகமது நபிகள் குறித்த அவமதிப்பு கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய நாடுகள் அணைத்து ஒன்றாக இணைந்து இந்தியாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளது. இந்நிலையில் பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்த நூபுர் ஷர்மா அக்கட்சியிலிருந்து சமீபத்தில் இடைநீக்கம் செய்யப்பட்டார். டெல்லி ஊடகப்பிரிவின் தலைவராக இருந்த நவீன் ஜின்டால் பாஜகவிலிருந்து நீக்கப்பட்டார்.

இந்திய துணை கண்டத்தின் அல்-கய்தா al-Qaeda என தன்னை தானே அழைத்துக்கொள்ளும் இந்த ஜிகாதி குழுவானது ஆங்கிலம் மற்றும் உருது மொழிகளில் அறிக்கை ஒன்றை கடந்த ஜூன் 7 ஆம் தேதி வெளியிட்டது. அதில் "சில தினங்களுக்கு முன்னர் இந்துத்துவாவின் பிரசாரகர்கள் முகமது நபி குறித்தும் அவருடைய மனைவி ஆயிஷா குறித்தும் இந்திய தொலைக்காட்சி சேனல் ஒன்றில் அவமதிக்கும் வகையிலும் அவதூறு பரப்பும் வகையிலும் பேசியுள்ளனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கருத்திற்கு எதிர்வினையாற்றியுள்ள அல்-கய்தா நபிகள் நாயகம் குறித்து வெறுக்கத்தக்க கருத்துக்களை கூறியுள்ள, இந்துத்துவா தீவிரவாதிகள் அதிகம் வசிக்கும் இந்தியாவில் தற்கொலை படை தாக்குதல்கள் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், முகமது நபியை இழிவுபடுத்துபவர்களுக்கு "மன்னிப்பு வழங்கப்படாது. இத்தகைய விவகாரத்திற்கு கண்டன வார்த்தைகள் மூலமாகவோ அல்லது வருத்தத்தின் மூலமாகவோ எதிர்வினையாற்றப்படாது" எனவும் அவை வன்முறை தாக்குதல்கள் மற்றும் பதிலடியால் மட்டுமே எதிர்கொள்ளப்படும் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் டெல்லி, பாம்பே, உத்திரபிரதேசம், குஜராத் ஆகிய பகுதிகளில் உள்ள இந்து தீவிரவாதிகள், தங்களது முடிவுகளுக்கா இப்போதே காத்திருக்கட்டும், அவர்கள் வீடுகளிலோ ராணுவ முகாம்களிலோ தஞ்சமடைய முடியாது என தெரிவித்துள்ளனர். 

இஸ்லாம் மற்றும் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களின் பாதுகாவலராக தன்னை காட்டிக்கொள்ள இந்த அமைப்பு முயற்சிக்கிறது. மேலும், முகமது நபி கூறியதாக சொல்லப்படும் "காஸ்வா இ-ஹிந்த்' (Ghazwa e Hind) என்று குறிப்பிடப்படும் போர் ஒன்றில், இறுதியில் முஸ்லிம்கள் இந்தியாவை வெல்வார்கள் என்ற முழக்கத்தைத் தூண்டும்வகையிலும் அல்-கய்தா செயல்பட்டு வருகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்