Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பரபரப்பு.. 3 பேர் கொடுமையான முறையில் படுகொலை.. 

Nandhinipriya Ganeshan September 15, 2022 & 12:40 [IST]
பரபரப்பு.. 3 பேர் கொடுமையான முறையில் படுகொலை.. Representative Image.

பாகிஸ்தானில் முத்தாகிட குவாமி இயக்கம் என்ற அரசியல் கட்சி செயல்பட்டு வருகிறது. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் இக்கட்சியை சேர்ந்த இர்பான் பசாரத், அபித் அப்பாசி மற்றும் வாசீம் அக்தர் ஆகிய 3 தொண்டர்களை அந்நாட்டு ராணுவத்தினரால் கைது செய்து கொண்டு செல்லப்பட்டனர். இந்நிலையில், அவர்களை மீட்டு தரும்படி அவர்களது குடும்பத்தினர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து, தொடர்ந்து, கோர்ட்டுக்கு அலைந்து வந்துள்ளனர். 

இந்த நிலையில் ராணுவ காவலில் வைத்து விசாரணை செய்து வந்த அம்மூவரும் நேற்று உயிரற்ற நிலையில், சிந்த் மாகாணத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டன. பரிசோதனை செய்தலில் அவர்களது உடல்களில் சித்ரவதை செய்து கொல்லப்பட்டதற்கான அடையாளங்கள் காணப்பட்டன.

குடும்பத்தினர் பல ஆண்டுகளாக அவர்களை மீட்டு தரக்கூறி கோர்ட்டுக்கு அலைந்த வந்த நிலையில், 3 பேரும் கொடுமையான முறையில், சித்ரவதை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டு, வெவ்வேறு இடங்களில் வீசப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்