கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி, சுமார் 11:50 மணியளவில் அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நெவாடாவில் உள்ள ஒரு நபர் அப்பகுதி காவல்துறையினருக்கு தொடர்பு கொண்டு, வானத்தில் இருந்து ஏதோ ஒன்று விழுந்ததை தான் பார்த்ததாகவும், தனது வீட்டின் பின்புறத்தில் ஏதோ இரண்டு உருவங்களின் அசைவை பார்த்ததாகவும் தெரிவித்தார். பின்னர், அந்த உருவங்களும் 8 அடி மற்றும் 10 அடி உயரம் இருந்ததாகவும், பெரிய கண்களையும், ஒரு பெரிய வாயுடன் இருந்ததாகவும் தெரிவித்தார்.
உடனே புகார் அளித்தவரின் வீட்டிற்கு சென்ற காவல்துறையினர், அந்த உருவங்கள் சரியாக எங்கே இருந்தன என்று கேட்டனர். அதற்கு அவை எங்க வீட்டின் பின்புறம் தான் இருந்தன, நான் கடவுள் மீது சத்தியமாக சொல்கிறேன். இது விளையாட்டு அல்ல. உண்மையில் நாங்கள் அதை பார்த்தோம். எங்களுக்கு பயமாக இருக்கிறது என்று ஒரு பதற்றத்துடன் கூறியுள்ளார்.
ஆனால், இந்த சம்பவத்திற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக தான் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு காவல்துறை அதிகாரியின் உடையில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் இருந்து ஒரு விசித்தரமான வீடியோவை பார்த்துள்ளனர். அதில் வானத்தில் இருந்து திடீரென ஒரு பிரகாசமான ஒளியுடன் கூடிய பொருள் ஒன்று பூமியை நோக்கி விழுவது போல் பதிவாகியுள்ளது.
இதை அந்த குடும்பத்தினரிடம் கூற, அந்த குடும்பத்தில் நான்கு பேரும் நாங்களும் இதேபோன்ற ஒன்றை தான் பார்த்தகாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், உண்மையில் அது ஏலியன்கள் தானா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…