Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

செயற்கை இறைச்சி விற்பனைக்கு அனுமதி: அமெரிக்க அரசு நடவடிக்கை..!

Baskarans Updated:
செயற்கை இறைச்சி விற்பனைக்கு அனுமதி: அமெரிக்க அரசு நடவடிக்கை..!Representative Image.

வாஷிங்டன்: அமெரிக்காவில் மக்கள் பயன்பாட்டிற்கு செயற்கை கோழி இறைச்சியை விற்பனை செய்ய அனுமதி அரசு அளித்துள்ளது.

ஆய்வகங்களில் விலங்குகளில் தசையில் இருந்து எடுக்கப்படும் திசுக்களை வைத்து வளர்க்கப்படும் இறைச்சியானது வளர்ப்பு இறைச்சி அல்லது செயற்கை இறைச்சி என்று அழைக்கப்படுகிறது. இந்த இறைச்சியை விற்பனை செய்ய அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

குறிப்பாக கோழி உயிரணுக்களில் இருந்து உருவாக்கப்படும் இறைச்சியை விற்க அந்நாட்டு அரசு அப்சைடு புட்ஸ், குட்மீட் ஆகிய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்நிலையில் இந்த இறைச்சியை விற்பனை செய்யும் போது, ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட இறைச்சி என்று வாடிக்கையாளர்களிடம் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழுப்பு, எலும்பு இல்லாத இறைச்சிக்கான உற்பத்தி செலவு அதிகம் என்றாலும், சில நிறுவனங்கள் இதை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். அமெரிக்காவை தொடர்ந்து முன்னதாக சிங்கப்பூரில் செயற்கை இறைச்சி விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்