நியூயார்க்: உலகத்தில் உள்ள ஒட்டு மொத்த நாடுகளுக்கும் இந்தியா அளித்த பரிசு யோகா என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்ற உலக யோகா தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். இதில் 108 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இந்தியாவின் மற்ற பாரம்பரியத்தைப் போலவே யோகாவும் சக்தி வாய்ந்தது. காப்புரிமை மற்றும் ராயல்டி இல்லாதது. இது அனைத்து மதங்களுக்கும் பொதுவானது. குறிப்பாக ஒட்டு மொத்த உலகிற்கும் இந்தியா அளித்த பரிசு யோகா.
அமைதியான, தூய்மையான பசுமையான மற்றும் நிலையான எதிர்காலத்தை உருவாக்க யோகாவின் சக்தியை பயன்படுத்துவோம். ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற இலக்கை நினைவாக்க ஒன்றிணைவோம் என்றார். ஐ.நா தலைமையகத்தில் நடந்த யோகா நிகழ்ச்சியில் அதிக நாடுகளை சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்றனர் என்ற கின்னஸ் சாதனையை படைத்தது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…