ஆம்னி வேனும் - சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியை சேர்ந்த சையது இப்ராஹிம் என்பவர் தனது உறவினரின் திருமணத்திற்காக நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த முத்து என்ற ஓட்டுனரின் ஆம்னி வேனை வாடகைக்கு எடுத்து தனது தாய் ரசிதா பேகம் (55), மனைவி ஆசிபா பானு, மகள் சஸ்மிதா (10), மகன் இஸ்மாயில் (14) ஆகியோரை அனுப்பி வைத்துள்ளார்.
இன்று உடுமலைக்கு திருமண விழா முடிந்து அவர்கள் திரும்ப மடத்துக்குளத்தை நோக்கி நரசிங்கபுரம் பகுதியில் ஆம்னி வேனில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த சரக்கு வாகனத்துடன் நேருக்கு நேராக மோதி விபத்துள்ளானது.
இதில், ஓட்டுநர் முத்து மற்றும் ரசீத பேகம், ஆசிபாபானு, சஸ்மிதா ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த சிறுவன் இஸ்மாயில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மடத்துக்குளம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…