விசாகப்பட்டினத்தில் 21 வயது மாணவி தனது தேர்வில் கலந்து கொள்வதற்காக சம்பாவதி ஆற்றை மிகவும் ஆபத்தான சூழலில் தன் இரு சகோதரர்களின் உதவியுடன் கடந்து சென்றுள்ளார். மாணவியின் சகோதரர்கள் உயிரை பணயம் வைத்து, அவரைத் தங்கள் தோளில் சுமந்து கொண்டு ஆற்றின் ஒரு பக்கத்தில் இருந்து மற்றொரு பக்கத்திற்கு சென்றனர்.
இவர்கள் ஆற்றைக் கடக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விஜயநகரம் மாவட்டம் கஜபதிநகரம் மண்டலத்தில் உள்ள மர்ரிவலசை கிராமத்தில் வசிக்கும் பெண் தட்டி கலாவதி, ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
கனமழை மற்றும் சம்பாவதி ஆறு நிரம்பி வழிவதால், அந்த பெண் வசிக்கு பகுதியிலிருந்து விசாகப்பட்டினத்திற்கு செல்வதற்கான அனைத்து போக்குவரத்து முறைகளும் துண்டிக்கப்பட்டது. எனினும் அந்த மாணவி தேர்வில் கலந்து கொள்வதில் உறுதியாக இருந்தார்.
தேர்வில் கலந்துகொள்ளும் தங்கையின் உறுதியைக் கண்டு, தங்கைக்கு உதவ அண்ணன்கள் இருவரும் முடிவெடுத்தனர். இதையடுத்து சகோதரார்கள் இருவரும் தங்கையை தோளில் சுமந்து ஆற்றின் மறுபக்கத்திற்கு அழைத்துச் சென்று உதவினார்கள்.
கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் விஜயநகரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. கனமழையால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…