சென்னை தாம்பரம் சிடிஓ காலனியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் சஜீஸ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சனிக்கிழமையன்று இவர் குடும்பத்துடன் மாமியார் வீட்டிற்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
அப்போது சதீஸ்குமார் வீடு திறந்திருப்பதாக அக்கம்பக்கத்தினர் அவருக்கு போன் செய்து கூறினர். பின்னர் அவசரமாக அங்கிருந்து வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 10 சவரன் நகை மட்டும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் மற்றும் அவரது இருசக்கர வாகனம் ஆகியவை திருடு போயிருந்தது. இந்த சம்பவம் குறித்து தாம்பரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, அங்கு விரைந்து வந்த போலீசார் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தனர்.
அப்போது அரைநிர்வாணமாக குடியிருப்புக்குள் புகுந்த திருடர்கள் சாமர்த்தியமாக அருகில் இருக்கும் வீடுகளுக்கு தாழ்பாள் போட்டுவிட்டு சதீஸ்குமார் வீட்டில் திருடியது தெரியவந்தது. இதனையடுத்து வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்டவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…