Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

செந்தில்பாலாஜிக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை - பார்வையாளர்களுக்கு அனுமதி மறுப்பு

Saraswathi Updated:
செந்தில்பாலாஜிக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை - பார்வையாளர்களுக்கு அனுமதி மறுப்புRepresentative Image.

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில்பாலாஜிக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதையடுத்து, அவரை பார்ப்பதற்கு அடுத்த 2 மணி நேரத்திற்கு பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறை அதிகாரிகளின் விசாரணை மற்றும் கைது நடவடிக்கையின்போது செந்தில்பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள அரசு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.  உடல்நலக்குறைவால் மயக்க நிலையில் இருந்த செந்தில்பாலாஜி தற்போது உடல்நலம் தேறியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  அவரது உயர்ரத்த அழுத்த அளவு அதிகமாகவும், இதய துடிப்பில் சிறிய அளவில் வேறுபாடும் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், தற்போது, செந்தில்பாலாஜிக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை நடத்தப்பட்டுவருகிறது. தேவைப்படும் பட்சத்தில் செந்தில்பாலாஜி ஆஞ்சியோகிராம் அறுவைசிகிச்சையும் செய்யப்படவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பரிசோதனையைத் தொடர்ந்து, அடுத்த 2 மணி நேரத்திற்கு பார்வையாளர்கள் யாரும் செந்தில்பாலாஜி பார்க்க அனுமதிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையின்போது செந்தில்பாலாஜி துன்புறுத்தப்பட்டதே அவரது உடல்நலக்குறைவுக்கு காரணம் எனவும் திமுகவினர் குற்றம்சாட்டிவருவது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்