மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி பல இடங்களில் ஒரே நேரத்தில் தீவிரவாத தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதல் நடைபெற்ற தாஜ் ஹோட்டல் உள்ளிட்ட பல இடங்களில் 175 பேர் பலியாகினர். மேலும், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், 2008-ம் ஆண்டு நடைபெற்ற தாக்குதலை போல மீண்டும் ஒரு தீவிரவாத தாக்குதல் மும்பையில் நடக்கும் என பாகிஸ்தான் செல்போன் எண்ணில் இருந்து மும்பை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மெசேஜ் வந்துள்ளது.
இதனையடுத்து, இந்த மெசேஜ் குறித்து விசாரணை நடந்து வருவதாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளனர்.
மேலும், 2008-ம் ஆண்டை போல் மீண்டும் தாக்குதல் என்று வந்த தகவல் மும்பை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…